- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் விளையாடிய சகோதரர்கள். இவர்கள் எத்தனையாவது சகோதரர்கள் தெரியுமா ? – விவரம் இதோ

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்திய அணியில் விளையாடிய சகோதர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்திய அணியில் தீபக் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் சகோதரர்களாக ஒரே போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். இதற்கு முன்னர் மூன்று சகோதரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மொஹிந்தர் அமர்நாத் மற்றும் அவரது சகோதரர் சுரீந்தர் அமர்நாத்.

அதற்குப் பிறகு இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் சகோதரர்கள் அதன்பிறகு ஹர்டிக் பாண்டியா க்ருனால் பாண்டியன் ஆகியோர் இந்திய அணிக்காக சகோதரர்களாக விளையாடியுள்ளனர். அதன் பின்னர் நான்காவது ஜோடியாக தற்போது தீபக் சாகர் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் சகோதரர்களும் பதான் மற்றும் பாண்டியா சகோததரர்கள் ஆல்ரவுண்டர் முத்திரை பதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by