இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான வார்னர் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்பொழுதுமே பொதுவாக இந்திய ரசிகர்கள் அவர்மீது ஒரு அன்பை வெளிப்படுத்தி தான் வருவார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு வார்னர் ஐபிஎல் தொடரில் இந்தியாவில் விளையாடும் போதும் சரி மற்ற நேரங்களிலும் சரி இந்திய ரசிகர்கள் அன்பையும் பெறும் படி அவரது செயல்களை வெளிப்படுத்துவார்.
Over, under, in and out; that’s what shoe-tying’s all about #AUSvIND pic.twitter.com/q9AOqSaT86
— cricket.com.au (@cricketcomau) November 27, 2020
அந்த வகையில் இன்றைய போட்டியில் பாண்டியா விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருடைய ஷு லேஸ் அவிழ்ந்து விட்டது. உடனே கவர் திசையில் நின்ற அவர் அதனை கவனித்து அவரிடம் சென்று அவிழ்ந்த ஷூ லேசை கட்டிவிட்டார். இதனைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். மேலும் இதனை கண்ட இந்திய ரசிகர்கள் இதனை வீடியோவாக இணையத்தில் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.