டிராவிடை சந்தித்ததும் மரியாதை நிமித்தமாக இலங்கை கேப்டன் செய்த செயல் – வைரலாகும் புகைப்படம்

Shanaka-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது 23வது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 147 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த மழைபெய்த இடைவெளியின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மைதானத்திற்குள் வந்து அதன் தன்மையை பார்த்துக் கொண்டிருந்தார்.

sl

- Advertisement -

இந்நிலையில் அப்போது அவருடன் இருந்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா நீண்ட நேரமாக ராகுல் டிராவிட் உடன் பேசிக்கொண்டிருந்தார். மேலும் திராவிடம் அவரிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்த இந்த விடயம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அப்போது இலங்கை அணியின் கேப்டன் ஷனகா செய்த ஒரு மரியாதை நிமித்தமான செயல் தற்போது ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

அந்த விடயம் யாதெனில் டிராவிட் போன்று ஒரு லெஜன்ட் முன்பு நார்மலாக பேசாமல் அவருக்கு உண்டான மரியாதை வழங்கிய ஷனாகா டிராவிடை கண்டதும் தனது தொப்பியை கீழிறக்கி அவருக்கு மரியாதை கொடுத்து பேசினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

shanaka

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 225 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி 39 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement