இவருக்கு மட்டும் தொடர்ச்சியா வாய்ப்பு கிடைச்சா அடிச்சி நொறுக்குவாரு – இந்திய வீரருக்கு கனேரியா ஆதரவு

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

Axar Patel Siraj IND vs WI

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியின் போது சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த சஞ்சு சாம்சன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே சஞ்சு சாம்சன் ஒரு திறமையான வீரர் என்றும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் இருந்து வருகிறது, ஆனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போது சஞ்சு சாம்சனுக்கு சீரான இடைவெளியில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் அரை சதம் அடித்து அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சனின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு இந்திய அணி நிறைய வாய்ப்புகளை வழங்கினால் அவரால் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக இந்திய அணிக்கு வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Samson

சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான வீரர் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் அவருடைய பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஆடும் விதம் என அனைத்துமே அட்டகாசமாக இருக்கிறது. இந்திய அணி மட்டும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கினால் நிச்சயம் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

எப்பொழுதெல்லாம் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வருகிறாரோ அப்போதெல்லாம் களத்தில் எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் மிகச் சாதாரணமாக சாம்சன் சந்திக்கிறார். அதோடு அவர் ஒரு பெரிய இன்னிங்சை விளையாடும் தன்மையை மட்டும் கற்றுக் கொண்டால் நிச்சயம் இந்திய அணியின் முக்கிய வீரராக அவர் இனிவரும் காலங்களில் திகழ்வார் என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடராஜனோடு சேர்த்து அவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் இந்தியா நிச்சயம் உ.கோ வெல்லும் – பாக் வீரர் கோரிக்கை

கனேரியா கூறியது போன்றே சாம்சன் மிகச் சிறப்பாக ஆடினாலும் அவரால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியவில்லை என்பதன் காரணமாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார். சாம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடும் தன்மையை கற்றுக் கொண்டால் நிச்சயம் அவர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறுவார் என்பதே நமது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement