இந்த வருடம் 12ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்காக சென்னை அணி வீரர்கள் ஏற்கனவே சென்னையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை சாம்பியன் ஆன சென்னை அணி இந்த முறையும் கோப்பையினை கைப்பற்றும் முன்னைப்புடன் களமிறங்க உள்ளது.
தொடர்ச்சியான விளம்பர படங்கள் மற்றும் போட்டோ தொகுப்புக்கு கலந்து கொண்டு வந்த சென்னை அணியில் மேலும் ஒரு சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதனபடி சென்னை வீரர்களான தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறிய பொம்மைகளை சென்னை நிர்வாகம் வெளியிட்டது. இதோ அந்த வீடியோ :
Namma Super Kings in Kutti Chutti Avatar! Play #Yellove with the Lion Miniatures. Buy Now: https://t.co/4QOIm7MjGz ! #WhistlePodu ???????? @LilliputHub pic.twitter.com/XPCquQdqOA
— Chennai Super Kings (@ChennaiIPL) March 15, 2019
இந்த பொம்மைகள் குழுந்தைகளை கவரும் விதமாகவும், அணியின் விளம்பரத்திற்காகவும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வீரர்களின் கையொப்பமும் இடம்பெற்றுள்ளது.