இந்த வருடம் 12ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்காக சென்னை அணி வீரர்கள் இன்று சென்னையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை சாம்பியன் ஆன சென்னை அணி இந்த முறையும் கோப்பையினை கைப்பற்றும் முன்னைப்புடன் களமிறங்க உள்ளது.
இன்று முதல் நாள் பயிற்சியில் முரளி விஜய், ரெய்னா மற்றும் ஜாதவ் போன்ற பல வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹஸ்ஸி பேட்டிங் பயிற்சியினை அளித்தார். இதனை விடியோவாக சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ :
It was the first day at work for our super batting coach #Hussmeister @mhussey393 and he talks about the boys and the summer that will be! #WhistlePodu #YelloveAgain ???????? pic.twitter.com/N6CGdC53MY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 15, 2019
மிஸ்டர் கிரிக்கெட் ஹஸ்ஸி ஏற்கனவே சென்னை அணிக்காக ஆடிய வீரர் என்பதாலும், அணி வீரர்களுடன் பலருக்கு அவருக்கு நெருங்கிய பழக்கம் உள்ளதாலும் அவர்கள் இன்று மகிழ்ச்சியாக பயிற்சியினை மேற்கொண்டனர்.