இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு. செய்தது அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்தது.
அப்படி முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்களில் வெளியேற ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஆவது பெரியபாட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பந்துகளில் 4 ரன்கள் அடித்த நிலையில் கோலி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் உடன் கை கோர்த்தது ரோகித் ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டாலும் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் அவுட்டாகி வெளியேற அடுத்து இளம் வீரரான பண்ட் களமிறங்கினார். வந்ததிலிருந்து இருவரும் சிறப்பாக விளையாட துவங்கிய இவர்கள் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் 88 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெளியேற பண்ட் தற்போது ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடந்த பல தொடர்களாக ரிஷப் பண்ட் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் மைதானத்தில் அவரை விமர்சித்து தோனியின் பெயரைக்கூறி ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். ஆனால் சென்னை ரசிகர்கள் இன்று ரிஷப் பண்டிற்கு ஆதரவாக தனியாக பேனர் எடுத்து வந்து மைதானத்தில் அமர்களப்படுத்தினர். அந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆனது.
Captain words became real @imVkohli said pant needs time to settle and he played today like that and crowd started cheering pant name
Finally Everyone is shouting Rishabh Pant
— Kingkohlifanclub🔥 (@Kingkohlifc18) December 15, 2019
அதனை தொடர்ந்து இன்று மைதானம் முழுவதும் பண்டின் பெயரை கூறி பண்ட், பண்ட் என்று கோஷமிட்டனர். இதனால் ரிஷப் பண்ட் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று உணர முடிந்தது. சென்னை ரசிகர்களின் இந்த வரவேற்பு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என்றும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.