இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி கடந்த ஆண்டு இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ததிலிருந்து இன்று வரை இவர்கள் இருவரும் ஒரு ரொமேன்டிக் ஜோடியாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும், இவர்கள் இருவர் சம்மந்தபட்ட ஒரு சில வீடியோக்களையும் சமூக வளைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் கோலி பதிவிட்டு அனுஷ்காவின் வீடியோ ஒன்று நீதி மன்றத்தில் இருந்து சம்மன் பெரும் அளவிற்க்கு பிரச்னையாகியுள்ளது. சமீபத்தில் கோலி , தனது மனைவி சமூக அக்கறையுடன் செய்த செயல் ஒன்றை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்
சமீபத்தில் கோலி மற்றும் அனுஷ்கா காரில் சென்றுள்ளனர். அப்போது மற்றொரு காரில் சென்றவர் சாலையில் குப்பையை வீசியுள்ளார். இதை கண்டு கோவமடைந்த அனுஷ்கா அந்த காரில் அமர்ந்திருந்தவரை துரத்தி பிடித்து ‘சாலையில் இப்படி பிளாஸ்டிக் குப்பைகளை வீசலாமா’ என்று அந்த நபரை விளாசியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கோலி.
தற்போது அந்த வீடியோவில் இருந்த ஆர் ஹன் சிங் என்ற நபர் , பொது தளத்தில் தன்னுடைய வீடியோ வெளியிட்டு தன்னை அவமான படுத்தியதாக நடிகை அனுஷ்காவிற்கும், அவரது கணவரான கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ‘ நான் காரில் சென்ற போது கவனக்குறைவால் ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரை சாலையில் வீசி விட்டேன், இதனால் அனுஷகா என்னை கண்டித்தார். அதற்கு நான் மன்னிப்பும் கேட்டு விட்டேன். ஆனால் அவர் அதனை பொறுமையாக கூறியிருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.