விராட் கோலி மற்றும் ரோஹித் இடையே வலுக்கும் பனிப்போர் . அதிகரிக்கும் பிளவு – விவரம் இதோ

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதிப் போட்டியின்போது நியூசிலாந்து அணியிடம் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து இந்திய அணி குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்கிடையே பிளவு என்று செய்திகள் வெளியாகின.

Kohli

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் ரோஹித்தின் ஆலோசனைகளை கோலி ஏற்கவில்லை என்றும் இதனால் இருவருக்கும் கேப்டன்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சண்டை வலுக்கும் விதமாக ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக சில வீரர்களும், கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்குமான பணிப்போர் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணம் யாதெனில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித்தின் மனைவியும் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

rohith

வழக்கமாக நல்ல நட்புடன் இருந்து ரோஹித் மனைவி ரித்திகா மற்றும் கோலி மனைவி அனுஷ்காவுக்கும் தற்போது நல்ல நட்பில் இல்லை என்று தெரிகிறது. இதனால் கோலி – ரோஹித் பிரச்சனை முற்றி உள்ளதாக தெரிகிறது. ஆனால் அணி நிர்வாகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி கூறும்போது : இது தற்போதைக்கு உருவாக்கப்பட்டுள்ள ஒரு கதையாகும் அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் உள்ளனர், அவர்களுக்கு எந்த பிளவும் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement