கோலியின் அணியில் பாண்டியா, ஜடேஜா ஆடமாட்டாங்க. வாய்ப்பு கொடுக்கமாட்டாரு – ஆகாஷ் சோப்ரா பகிர்ந்த தகவல்

Pandya
- Advertisement -

இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடையில் இந்த தொடர் கடந்த மாதம்தான் முடிவு செய்யப்பட்டு உறுதியும் செய்யப்பட்டது. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலியா தொடரை வென்றது.

indvsaus

- Advertisement -

இதன் காரணமாக இந்த முறை இந்த தொடர் அதிக போட்டி தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சம பலத்துடன் காணப்படுவதால் யார் வெற்றி பெறுவார் என்று தெரியாத அளவிற்கு போட்டி இருக்கும். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்காது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்…

Pandya 3

ஹர்திக் பாண்டியா தற்போதுதான் இந்திய அணிக்குள் பல மாதங்கள் கழித்து வந்திருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வேண்டுமானால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டியில் இவருக்கு அணியில் இடம் கிடைக்காது. ஏனெனில் இன்னும் அவர் தனது பழைய ஆட்டத்தை ஆடவில்லை.பந்து வீச்சும் சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

Jadeja

மேலும ரவீந்திர ஜடேஜா விற்கும் அணிகளிடம் கிடைக்காது ஏனெனில் ரவிச்சந்திரன் அஷ்வின் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் அணியில் இடம் கிடைக்கும். ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு ஆல்ரவுண்டர்களை வைத்து விராட் கோலி விளையாட முடியாது என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement