சாஹல் மற்றும் குல்தீப் இருவரில் இவர் மட்டும் இந்திய அணியின் டி20 போட்டிகளில் திரும்ப வருவார் – ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை

Chahal
- Advertisement -

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் தொடர்ந்து அணியில் இடம் பெற்று வந்தனர். இந்நிலையில் சமீபகாலமாக அவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓரம்கட்ட வருகின்றனர். அடுத்த ஆண்டு வரும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் விதமாக அவர்கள் இருவரும் அணியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.

chahal

மேலும் அவர்களுக்கு பதிலாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையை இறுதிவரை பலப்படுத்த சுந்தர் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரை அணியில் இணைத்து அணியின் பேட்டிங் வரிசையை அதிகரிக்க புதிய திட்டம் வகுத்து இருப்பதாக கோலி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி மற்றும் டி20 போட்டிகளில் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் தொடர்ந்து இடம் தராமல் வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது : தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த தொடரிலும் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றனர். இதனால் அணிக்கு நன்மைதான் இருப்பினும் சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

Chahal

இவர்கள் இருவரில் சாஹல் அணிக்கு கண்டிப்பாக திரும்ப வருவார் ஏனென்றால் அவர் எதிரணி எவ்வளவு பலமாக இருந்தாலும் தக்க சமயத்தில் விக்கெட்டை வீழ்த்தும் திறன் உடையவர் மேலும் இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் தன்மையுடைய சிறந்த பந்துவீச்சாளர் எனவே சாஹல் டி20 போட்டியில் நிச்சயம் திரும்பி வருவார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement