ஹார்டிக் பாண்டியா செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டேன் – நெகிழ்ந்து போன இலங்கை வீரர்

Karunaratne
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் வீரரான ஹர்டிக் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி போட்டி துவங்கும் முன் இரு அணி வீரர்களும் பயிற்சி செய்து கொண்டிருக்கையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன பாண்டியா இலங்கை அணியின் வீரரான சமிகா கருணரத்னாவிற்கு தனது பேட் ஒன்றினை பரிசளித்தார்.

- Advertisement -

எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவிசெய்யும் பாண்டியா தற்போது அணிகளை கடந்து தனது பேட்டை இலங்கை வீரருக்கு பரிசளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான கருணரத்னே ஒருநாள் தொடரின் போது பேட்டிங்கிலும் அசத்தலாக செயல்பட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த பேட்டை பரிசாகப் பெற்ற கருணரத்னே அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து : என்னுடைய ரோல் மாடல் ஹார்திக் பாண்டியாவிடமிருந்து இந்த பேட்டை பெற்றதை கௌரவமாக கருதுகிறேன். அதுவும் என்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் இது சாத்தியமாகி இருக்கிறது. நீங்கள் ஒரு அருமையான மனிதர் உங்களின் இந்த பரிசால் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நாளை எப்போதும் மறக்கமாட்டேன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார் சமிகா கருணரத்னே

Advertisement