அவர் வந்தாலும் வரலானாலும் அங்க யாரும் உட்காரமாட்டோம். தோனி குறித்து உருக்கமாக பேசிய சாஹல் – விவரம் இதோ

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் : ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். தேர்வாளர்களுக்கும் தெரியும் என்று தோனியின் இடம் குறித்து சூசகமாக தனது கருத்தினை தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணி நியூசிலாந்தில் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது தோனி குறித்த ஒரு நினைவை அணி பேருந்திலிருந்து சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பகிர்ந்தார். அதில் இந்திய அணி வீரர்களிடம் பயணம் செய்யும் போது பேருந்தில் ஒவ்வொரு வீரரிடமும் ஜாலியாக பேசிய சாஹல் தோனி குறித்தும் பேசி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவினை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

அதில் அணி பேருந்தின் கடைசி ஓர இருக்கையில் (கடைசி சீட்) நாங்கள் யாருமே அமர மாட்டோம். அது தோனியின் இடம் அந்த இடம் அவருக்கு சொந்தமானது. நாங்கள் தோனியை மிஸ் செய்கிறோம் என்று உருக்கமாக தெரிவித்தார். தோனி குறித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement