Worldcup : தோனி இதுகுறித்து எப்போது என்ன சொன்னாலும் அதனை நாங்கள் கேட்போம் – சாஹல்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Dhoni chahal
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. நாளை இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்தும், தோனி குறித்தும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த உலகக் கோப்பை போட்டியில் நானும் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை எங்கள் இருவருக்கும் உண்டு. குல்தீப் என்னுடைய சிறிய சகோதரர் போன்றவர் எனவே அவருக்கு என்னால் முடிந்தவரை அறிவுரை கொடுத்து சிறப்பாக பந்துவீசி செய்வேன்.

kuldeep-yadav

மேலும் நான் பந்துவீச்சில் கஷ்டப்படும் வேலையில் அவர் எனக்கு சில கருத்துகளை வழங்குவார் மேலும் டோனி நாங்கள் இருவரும் அறிமுகமான போட்டியில் இருந்து எங்களுக்கு ஆதரவினையும் அறிவுரைகளும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர் கூறும் அறிவுரைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அவர் இந்த உலக கோப்பை தொடரிலும் எங்களிடம் எப்படி பந்துவீசி சொன்னாலும் நாங்கள் அப்படி பந்துவீச தயாராக உள்ளோம். ஏனெனில், அவர் பேட்ஸ்மென்கள் என்ன யோசிக்கிறார் என்றும் புரிந்து கொள்கிறார். எனவே அவரின் ஆலோசனைக்கு நாங்கள் செவிகொடுத்து பந்துவீச தயாராக உள்ளோம் என்று சாஹல் கூறினார்.

Advertisement