INDIA : உலகக்கோப்பை துவங்கும் முன் பார்மிற்கு திரும்பிய இரைட்டையர்கள் – விவரம் இதோ

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை

kuldeep
- Advertisement -

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

- Advertisement -

அடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜோடியான சாஹல் மற்றும் குல்தீப் இரட்டையர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இருவரும் இணைந்து 6 விக்கெட்டுகளை எடுத்தனர்.

chahal

சாஹல் 10 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். தொடர் துவங்கும் முன் இரண்டு ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணியை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement