ராகுல் கூறிய இந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் – ஆஸி அணிக்காக அறிமுகமான வீரர் பேட்டி

Green
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

Jadeja

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக நடராஜன் அறிமுகமானது போல் ஆஸ்திரேலிய அணி சார்பாக இருபத்தொரு வயது ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் என்ற இளம் வீரர் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே முறையான பங்களிப்பை அவர் அளித்தார். பவுலிங்கில் 4 ஓவர் வீசி விக்கெட் எடுக்காமல் 27 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் பேட்டியின் போதும் 27 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களை குவித்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது அறிமுக ஆட்டம் குறித்து பேசிய அவர் :

- Advertisement -

இந்த போட்டியில் நான் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆன கேஎல் ராகுல் கூறிய வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஸ்டம்பிற்கு பின்னால் ராகுல் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கட்டத்தில் என்னை பார்த்து முதல் போட்டி என்பதால் ” நீ சற்று நடுக்கத்தோடு உள்ளாயா ? அல்லது இல்லையா ? என்று கேட்டார்.

Green 1

நான் அதற்கு ” சிறிது நடுக்கத்துடனே தான் விளையாடி வருகிறேன்” என்று அவருக்கு பதில் அளித்தேன். அதன்பின்னர் அவர் என்னை நோக்கி பயப்பட வேண்டாம் ” கோ வெல் யங்ஸ்டர்” என்று ஊக்கப்படுத்தும் ஒரு வார்த்தையை கூறினார். அது எனக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை தந்தது. அவரின் இந்த வார்த்தையை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன் என்னுள் அது பசுமையான நினைவாக இருக்கும் என கிரீன் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் ராகுலின் இந்த செயலுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது

Advertisement