யார் இந்த சஞ்சனா கணேசன் ? பும்ரா திருமணம் செய்த காதலி குறித்த – சுவாரசிய பதிவு

Sanjana-2
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு கடைசி டெஸ்ட் போட்டியில் ஓய்வு கேட்ட பும்ரா அடுத்தடுத்து டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்திலும் தனக்கு விடுப்பு வேண்டும் என்று பி.சி.சி.ஐ யிடம் கேட்டுக்கொண்டார். மேலும் தான் தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுக்க இருப்பதாகவும் பி.சி.சி.ஐ யிடம் அவர் தெரிவித்திருந்தார்.

sanjan 2

- Advertisement -

இந்நிலையில் இவ்வளவு பெரிய ஓய்வு எடுப்பதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழ ஆரம்பிக்க பிசிசிஐ பும்ராவின் திருமணத்தைப் பற்றி மறைமுகமாக சில தகவல்களை வெளியிட்டு உறுதிசெய்தது. அதன்படி நேற்று மார்ச் 14ஆம் தேதி பும்ரா சஞ்சனா கணேசன் என்பவரை கோவாவில் வைத்து எளிமையாக தனது திருமணத்தை முடித்துள்ளார். உறவினர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் என 20 பேர் மட்டும் கலந்து கொண்ட இந்த கல்யாணம் நடைபெற்று முடிந்துள்ளது.

மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் தங்களது திருமண உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் பும்ரா திருமணம் செய்த இந்த சஞ்சனா கணேசன் என்பவர் யார் என்ற தகவல்தான் தற்போது ரசிகர்களிடையே ஒரு கேள்வியாக எழுந்து வருகிறது. அவரைப் பற்றிய விவரத்தை தற்போது இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

Sanjana

28 வயதான சஞ்சனா கணேசன் என்பவர் ஒரு தமிழ் பெண். இவரது தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் தற்போது இவர்கள் மகாராஷ்டிராவின் புனேவில் செட்டில் ஆகிவிட்டனர். மேலும் சஞ்சனா விளையாட்டு தொகுப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். ஐபிஎல் தொடரின்போது கேகேஆர் அணிக்காக சில ரியாலிட்டி ஷோக்களை அவர் தொகுத்து வழங்கியும் உள்ளார்.

- Advertisement -

விளையாட்டு போட்டிகளை தொகுத்து வழங்கும் பெண்களை இந்திய வீரர்கள் திருமணம் செய்வது என்பது புதிது கிடையாது. அந்த வகையில் பும்ராவும் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்பவரை காதலித்து திருமணம் புரிந்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்தாலும் யாருக்கும் தெரியாமல் அதை வெளியிடாமல் ரகசியமாக காத்து தற்போது திருமணத்தில் முடித்துள்ளனர்.

சஞ்சனா கணேசன் தொகுப்பாளராக வருவதற்கு முன்னால் மாடலிங் செய்துள்ளார். 2012ஆம் ஆண்டு “பெமினா ஸ்டைல் திவா” என்ற ஃபேஷன் ஷோவில் பங்கேற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 2013ஆம் ஆண்டு “ஃபெமினா மிஸ் இந்தியா” போட்டியில் பங்கேற்று இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி 2014 ஆம் ஆண்டு “மிஸ் இந்தியா” இறுதி போட்டியாளராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement