இந்த விடயம் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலைவலியாக உள்ளது – பும்ரா

Bumrah
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

jadeja

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் இந்திய அணிக்கு இது ஒரு நல்ல தலைவலியாக இருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் ஹாட்ரிக் பாண்டியா மற்றும் ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் நான் ஆகிய அனைவரும் விக்கெட்டுகளை சாய்த்து வருகிறோம்.

இதனால் யாரை அணியில் தேர்ந்தெடுப்பது என்ற ஆரோக்கியமான தலைவலி இந்திய அணிக்கு உள்ளது. மேலும் என்னை புகழ்வதையும், விமர்சிப்பதையும் நான் என்னுடைய சிந்தனைக்கு எடுத்துச் செல்வதில்லை. வழக்கம் போல என்னோட ஆட்டத்திலேயே கவனத்தை செலுத்துகிறேன் என்று பும்ரா கூறினார்.

Bumrah

இலங்கைக்கு எதிரான போட்டியின்போது வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தது குறிப்பிடத்தக்கது. 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 56 போட்டியில் 100 விக்கெட்டுகள் சாய்த்து முதலிடத்தில் ஷமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement