இந்த நாளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று கூறிய பும்ரா – காரணம் இதுதான்

Bumrah
- Advertisement -

நேற்றைய ஆட்டம் முடிந்து தான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அந்த நெகிழ்ச்சியான நிகழ்வினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பும்ரா இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். பும்ரா செய்த இந்த சாதனைக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement