தனது சிறுவயது பௌலிங் ரகசியத்தை முதன் முதலாக வெளிப்படுத்திய பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக இளம்வயதில் அறிமுகமான பும்ரா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனது முகத்தை வெளிக் காட்டினார். அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் இருந்து அவரின் திறமையை கண்ட இந்திய அணி நிர்வாகம் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்தது. தற்போது இருக்கும் பவுலர்களில் டெத் ஓவர்களில் எந்த எதிரணியையும் கலங்கடிக்கும் வீரராக பும்ரா திகழ்கிறார். மேலும் அவரது பந்துவீச்சில் ரன்கள் குவிப்பது கடினமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Bumrah

- Advertisement -

பும்ரா இந்திய அணிக்கு நுழைந்த ஆரம்பத்திலிருந்தே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித்தந்தார். இன்று உலகின் நம்பர் ஒன் பவுலர் என்ற பெயரையும் எடுத்துள்ள பும்ரா இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக அனைவராலும் புகழப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது சிறுவயது பந்துவீச்சை முறை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : நான் சிறுவயதில் உலகில் உள்ள அனைத்து முன்னணி பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் விதத்தை டிவியில் பார்த்து அதனை அவர்களைப் போலவே செய்து பார்ப்பேன். தினமும் நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஒவ்வொரு வீரர் போன்றும் பந்து வீச முயற்சி செய்வேன் அதனை தொடர்ந்து பின்பற்றி வந்தேன். அதன் பிறகு நான் வளரும் காலத்தில் எனக்கென ஒரு பவுலிங் ஸ்டைல் வந்தது. அதனை நான் அப்படியே பின்பற்ற தொடங்கினேன். அதனால் என்னுடைய திறன் அதிகரித்தது.

bumrah 1

அதன்பிறகு தொடர் பயிற்சியால் என் வேகமும் அதிகரித்தது. இன்று நான் உலகின் நம்பர் 1 பவுலராக நான் இருக்க என்னுடைய தொடர் பயிற்சியே காரணம். என்னுடைய பந்துவீசும் முறையை மாற்றிக் கொள்ளாமல் அதிலேயே மேம்பாட்டை அடைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement