இவங்க 2 பேருக்கும் எதிரா பவுலிங் போடறது ரொம்ப கஷ்டம். நான் பார்த்து பயந்த 2 வீரர்கள் இவர்கள்தான் – பும்ரா வெளிப்படை

Bumrah
- Advertisement -

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 21 நாள் லாக்டவுன் ஆகியுள்ளது . இதனால் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் விழிப்புணர்வோடு அவரவர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருக்கின்றனர்.

Bumrah-2

- Advertisement -

இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நேரலையில் வரும் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அனைவரும் விழிப்புணர்வு செய்வதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களுக்காக அவ்வப்போது நேரலையில் வந்து அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ரோஹித் சர்மாவுடன் செய்த நேரலையில் தனது கிரிக்கெட் குறித்து பல்வேறு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Bumrah-1

அதன்படி இந்திய அணியின் யார்க்கர் மன்னனாக திகழும் பும்ரா ஏகப்பட்ட யார்க்கர்களை எதிரணி வீரர்களுக்கு வீசி இறுதி நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர் என்பது நாம் அறிந்ததே. மேலும் இவர் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த டெத் பவுலர் என்ற பெயரையும் அவர் எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவர் தனக்கு சவால் விடும் வீரர்கள் இருவர் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : தற்போதைய கிரிக்கெட் உலகில் எனது பந்துவீச்சிற்கு எதிராக மிகப்பெரிய சவாலாக அமைந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் வீரரான டி வில்லியர்ஸ் மற்றும் இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ஆகியோர் தான் என்று கூறியுள்ளார்.

ABD

Buttler

அவர்கள் இருவருக்கும் எதிராக பௌலிங் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் இருவர் பேட்டிங் செய்யும்போது எவ்வாறு பந்து வீசுவது என்பதில் குழப்பமே ஏற்படும். ஏனெனில் அவர்கள் அனைத்து திசைகளிலும் அடிக்கக் கூடியவர்கள் என்று பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement