மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பும்ரா மற்றும் தவான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ind-1
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் நடந்து முடிந்துள்ள இந்த தொடரோடு சேர்த்து 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சிறப்பான ஒரு ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு வரை இந்திய அணிக்கு போட்டிகள் கிடையாது.

- Advertisement -

மேலும் அடுத்த 2020 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு முதல் தொடராக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் முதல் டி20 போட்டி ஜனவரி 5ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் துவங்க உள்ளது. 2 ஆவது போட்டி 7 ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாம் டி20 போட்டி 10 ஆம் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஏற்கனவே காயம் காரணமாக அணியில் இருந்த விலகி இருந்த இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஷிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தொடர்களாகவே இந்த அணி வீரர்கள் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Bumrah

Dhawan

இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ரா மற்றும் தவான் ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்க காத்து இருப்பதாகவும் அவர்கள் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணியுடன் இணைவார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும், அதில் இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement