கோலியை பிரபல கால்பந்தாட்ட வீரரருடன் ஒப்பிட்டு பேசிய பிராவோ.! சந்தோஷத்தில் ரசிகர்கள்..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அசைக்க முடியாத பார்மில் இருந்து வருகிறார். கிரிக்கெட்டின் உண்மையான ரசிகர்கள் யாரும் கோலியின் ஆட்டத்தை பற்றி கொஞ்சம் கூட குறை கூற முடியாது என்றும் கூறலாம்.

kolifootball

- Advertisement -

இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில் கோலி தன்னுடன் விளையாடும் வீரர்களை தாண்டி எதிரணியில் இருக்கும் வீரர்களையும் தனது ரசிகராக மற்றும் அளவிற்கு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வசியம் செய்து விடுகிறார். அதனால் இவருக்கு எதிரணி வீரர்களும் இவரது ரசிகர்களாகமாறி புகழ்ந்து வருகின்றனர்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விளையாடி வந்த கோலி, சென்னை அணியில் விளையாடி வந்த மேற்கிந்திய வீரர் பிராவோவிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் பிராவோ, வீராட் கோலியை கால்பந்து போட்டியில் நம்பர் 1 வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

kholi

சமீபத்தில் இதுபற்றி பேசியுள்ள பிராவோ ‘ கோலி, என்னுடைய சகோதரருடன் யு19 போட்டிகளில் விளையாடியுள்ளார், அப்போது நான் என்னுடைய சகோதரனிடம் கூறுவேன் ‘நீ அவரை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. கோலி கிரிக்கெட் உலகின் ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement