கிரிக்கெட் போட்டிகளின் வளர்ச்சியில் டி20 தனி இடம் பிடித்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மூலம் கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவத்தை பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்போதைய நவீன சூழலில் நேரமின்மை காரணமாக முழுவதுமாக போட்டியை ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர் இதனை சுவாரஸ்யமாக மாற்ற வேண்டுமென்று 2003ஆம் ஆண்டு முதல் சில நாடுகளில் டி20 போட்டிகள் அவ்வப்போது நடந்தாலும் சர்வதேச அளவில் ஐ.சி.சி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் டி20 போட்டிகளை காண ரசிகர்கள் என ஒரு தனி செட் ஆப் ரசிகர்கள் உண்டாகினர். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் இந்தியாவில் துவங்கப்பட்டது.
அதிலிருந்து டி20 போட்டிகளின் ஆதிக்கம் உச்சத்திற்கு சென்றது. மேலும் இந்தியாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல்வேறு நாட்டு கிரிக்கெட் நிர்வாகமும் அந்தந்த நாட்டில் டி20 போட்டிகளில் அறிமுகம் செய்தனர். அதன் பின்னர் தற்போது டி20 கிரிக்கெட் வேற லெவல் உள்ளது. மேலும் பேட்ஸ்மேன்களும் t20 பார்மட் ஆல் அதிரடியாக மாறினர்.
இப்பொழுது 50 ஓவர் கிரிக்கெட்டில் எவ்வளவு இலக்கு வைத்தாலும் அடிக்கக்கூடிய அளவிற்கு டி20 உலகக்கோப்பை அவர்களுக்கு உதவியது. இதுவரை டி20 அணியின் வீரரான கிறிஸ் கெயில் மட்டுமே அதிகபட்சமாக 175 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக்கிடம் ரசிகர் ஒருவர் டி20 கிரிக்கெட்டில் யார் இரட்டை சதத்தை அடிப்பார்கள் என்று கேள்வி முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த அவர் நிச்சயம் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மாவிற்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் அவருடைய திறனும், அவருடைய பேட்டிங் ஸ்டைல்லும் கண்டிப்பாக அவருக்கு இந்த சாதனையை படைக்க வாய்ப்பாக அமையும்.
மேலும் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதால் நிச்சயம் இந்த சாதனை படைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 116 ரன்கள் எடுத்துள்ளார். ஆனாலும் அவரது பெயரை அவர் கூறியது ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.