இந்த 11 பேரை விளையாடவையுங்க இந்திய அணிக்கு தான் கப். டி20 உ.கோ இந்திய அணியை தேர்வு செய்த – பிராட் ஹாக்

Hogg
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியை தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியும் தற்போது டி20 உலகக் கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஈடுபட்டுள்ளது.

cup

- Advertisement -

இந்நிலையில் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், நிபுணர்கள் என பலரும் இந்த உலக கோப்பையில் இடம்பெறும் இந்திய வீரர்களை பட்டியலிட்டு தாங்கள் தேர்வு செய்த அணியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அவர் தேர்வு செய்த அணியில் விராட் கோலி கூறியது போலவே ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரை துவக்க வீரர்களாக அவர் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் நான்காவது இடத்தில் கே.எல் ராகுல்லையும் அவர் தேர்வு செய்துள்ளது வித்தியாசமான முடிவாக உள்ளது. அதேபோன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பிங் பபேட்ஸ்மேன் பண்டை தேர்வு செய்துள்ளார்.

IND

ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா வையும் சேர்த்துள்ளதால் பேட்டிங் பலமாக அமைந்துள்ளது. பவுலர்களை கணக்கில் கொள்ளும்போது ஜஸ்பிரித் பும்ரா, தாகூர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை வேகப்பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹல் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார். இந்த அணியை கண்டிப்பாக தேர்வு செய்தால் கோப்பையை வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிராட் ஹாக் தேர்வு செய்துள்ள அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) விராட் கோலி, 3) சூரியகுமார் யாதவ், 4) கே.எல்.ராகுல், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஷர்துல் தாகூர், 10) பும்ரா, 11) சாஹல் / குல்தீப் யாதவ்

Advertisement