டிராவிட் எடுத்த இந்த ஒரு முக்கியமான முடிவு தான். வெற்றிக்கு காரணம் – புவனேஷ்வர் குமார் ஓபன்டாக்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

deepak 2

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இறுதியில் அமைத்த பார்ட்னர்ஷிப் காரணமாக அமைந்தது. எட்டாவது வீரராக களமிறங்கிய தீபக் சாகர் 82 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் என 69 ரன்கள் குவித்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த புவனேஸ்வர் குமார் 19 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் கைகொடுத்தார். இப்படி இவர்கள் இருவரின் சிறப்பான பாட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி இறுதி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராகுல் டிராவிட் எடுத்த முடிவு ஒன்று தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றும் புவனேஷ்வர் குமார் போட்டி முடிந்து பகிர்ந்துள்ளார்.

deepak

இதுகுறித்து அவர் கூறுகையில் : தீபக் சாஹர் பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக கை கொடுக்க கூடியவர் என்பதை முன்கூட்டியே டிராவிட் அறிந்து வைத்துள்ளார். ஏனெனில் ரஞ்சி கோப்பைக்கு இந்திய ஏ அணியை தயார் செய்த டிராவிடின் கீழ் ஏற்கனவே தீபக் சாஹர் விளையாடியுள்ளார் இதன் காரணமாக அவரின் பேட்டிங் திறமை குறித்து அவருக்கு தெரிந்திருக்கிறது.

deepak 1

அதனாலேயே எனக்கு முன்னால் தீபக் சாகரை பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவரின் இந்த முடிவு தற்போது வெற்றிகரமாக அமைந்துள்ளது என புவனேஸ்வர் குமார் டிராவிட் எடுத்த முடிவு குறித்து பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement