க்ருனால் பாண்டியாவுடன் நெருக்கம். தனிமைப்படுத்தப்பட்ட தவான் – புதிய கேப்டன் யார் தெரியுமா ?

dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆனா க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இந்தப் போட்டியானது 28ஆம் தேதி இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் க்ருனால் பாண்டியாவுடன் நெருக்கமாக இருந்த எட்டு நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட தாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

Krunal-1

- Advertisement -

அந்த வகையில் கேப்டன் ஷிகர் தவானும் அவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது.

இதன் காரணமாக இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பல வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பும் ஒரு புதிய அணி விளையாடும் அளவிற்கு ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக புவனேஸ்வர் குமார் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது .

Bhuvi

சஞ்சு சாம்சன் அணியில் இருந்தாலும் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் நிச்சயம் இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்றும் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிகிறது. இதனால் இன்றைய போட்டியின் போது ஏகப்பட்ட அறிமுக வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement