ரோஹித் மற்றும் கோலி இடையேயான உறவு குறித்த உண்மையை வெளியிட்ட – பந்துவீச்சு பயிற்சியாளர்

Bharath-1
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியோடு தோற்று வெளியேறியது. இந்திய அணியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அதிலும் குறிப்பாக மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டன்களை மாற்றி அமைக்கும் முடிவை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

Rohith

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஆகியோரது உறவு குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : கோலி மற்றும் ரோஹித் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மேலும் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் வெளியில் அடிபடும் இந்தப் பேச்சுக்கள் எதுவும் உண்மை இல்லை. அவர்கள் இருவர் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. மைதானத்தில் சில நேரங்களில் கோலி தடுமாறும்போது ரோகித் உடனடியாக ஓடிவந்து தனது ஆலோசனை கூறுவதை நாம் கவனத்து இருக்க முடியும்.

rohith

கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இடையே நல்ல நட்பு உள்ளது. உலகக்கோப்பை தொடரில் ரோஹித் நன்றாக செயல்பட்ட போதும் முதலாக உற்சாகப்படுத்தியது கோலிதான். அதனால் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் உள்ளார்கள் என்று பரத் அருண் கூறினார்.

Advertisement