அஷ்வின் இன்றைய 4 ஆவது டெஸ்டில் விளையாடுவாரா ? மாட்டாரா ? – பரத் அருண் பதில்

Arun
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் 3:30 மணியளவில் துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலைப் வகிக்கின்றன. இதன் காரணமாக இன்றைய நான்காவது போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

indvseng

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும். அதே வகையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் ஏற்கனவே முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அணியில் இடம்பெறாததால் இந்த போட்டியில் நிச்சயம் அவர் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் அஷ்வின் விளையாடுவாரா ? மாட்டாரா ? என்பது குறித்து பௌலிங் கோச் பரத் அருண் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நமது அணியின் சிறந்த பவுலர்களில் அஷ்வினும் ஒருவர். அவருக்கு இந்த தொடரில் இதுவரை வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டவசமானது.

Ashwin

அதேபோன்று இன்றைய போட்டி நடைபெற இருக்கும் ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று ரெக்கார்ட் இருக்கின்றன. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தின் ஆடுகளத்தை முதல் நாள் காலை பார்த்த பிறகுதான் அஷ்வின் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement