இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் நிச்சயம் இளம்வீரரான இவர் விளையாடுவார் – பரத் அருண் உறுதி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.

ind

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ரஹானே இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். இதில் இளம் வீரர்களான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தங்கராசு நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத குல்தீப் யாதவை ரஹானே உள்ளிட்ட அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்கள். மேலும் உங்களுக்கான வாய்ப்புகளும் கட்டாயம் தேடி வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

umesh kuldeep

இந்நிலையில் தற்போது இந்திய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணும் குல்தீப் யாதவ் குறித்து பேசியிருக்கிறார். பரத் அருண் கூறுகையில் “குல்தீப் யாதவ் தனது பவுலிங்கை மேம்படுத்த உழைத்து வருகிறார். இவரது பவுலிங் தற்போது சிறப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத இவரது உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த தருணத்தில் அவருடைய மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பது எனக்கு புரிகிறது.

Kuldeep

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு இருக்கு. அப்போது குல்தீப் தனது திறமையை நிரூபித்து காட்டுவார்” என்று கூறியுள்ளார் பரத் அருண்.

Advertisement