பண்ட் மற்றும் சஹாக்கு பதிலாக இந்திய அணியில் தேர்வாக இருக்கும் அடுத்த விக்கெட்கீப்பர் – யார் தெரியுமா ?

pant 5
- Advertisement -

கடந்த 2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதிலிருந்து இந்திய அணிக்கு விருத்திமான் சஹா டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். அவரது இடத்தை சமீபத்தில் இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் ஆக்கிரமித்தார்.

Dhoni

இந்நிலையில் அடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கான தொடரில் புதிய கீப்பர் தேர்வு குறித்து முக்கிய விவாதம் நடைபெற உள்ளதாகவும் அதில் புதிய கீப்பரை தேர்ந்தெடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி ஓய்வு தொடர்ந்து புதிய விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்திய அணியில் பண்ட் மற்றும் சஹா தவிர தற்போது ஆந்திர பிரதேஷ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடி வரும் கே எஸ் பரத் இந்திய விக்கெட் கீப்பராக உள்ளார். இவர் தற்போது இந்திய அணியின் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

bharath

தொடர்ந்து அருமையாக விளையாடி வரும் அவர் கடந்த ஒரு வருடத்தில் 10 போட்டியில் 286 ரன்கள் குவித்துள்ளார். மேலும் பல அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி உள்ளார் இந்திய ஏ அணியில் இருந்து விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்பட்டால் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement