ரஞ்சி கோப்பையில் நீங்க ஆடவேண்டாம். நாங்க சொல்றத மட்டும் செய்யுங்க – ராகுலுக்கு ஆர்டர் போட்ட பி.சி.சி.ஐ

Rahul
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத கேஎல் ராகுல் தனது உள்ளூர் அணியான கர்நாடகாவிற்கு ரஞ்சி கோப்பையில் காலிறுதிப் போட்டியில் விளையாடப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் , மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் , பினிஷர் என பல வேலைகளை எடுத்து செய்து வருகிறார்.

Rahul

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடினார் . டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் தற்போது இந்தியா திரும்பியுள்ளார் ராகுல்.இந்நிலையில் இந்தியாவிற்கு வந்து தனது உள்ளூர் அணியான கர்நாடக அணி காலிறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

20ஆம் தேதி நடைபெறும் கர்நாடகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் ஆட போவதில்லை. ஏனெனில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி எடுக்க சொல்லி அனுப்பி உள்ளது பிசிசிஐ. எனவே பி.சி.சி.ஐ யின் இந்த கோரிக்கையை ஏற்ற ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுக்க உள்ளார்.

Rahul

இதே சமயத்தில் அந்த அணியின் கேப்டனான மணிஷ் பாண்டே கர்நாடக அணி காலிறுதிப் போட்டியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் ராகுல் ஐ.பி.எல் தொடருக்கான பஞ்சாப் அணியில் கேப்டனாகவும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement