கொல்கத்தாவில் புதிய சொகுசு வீடு வாங்கிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி – ரசிகர்கள் வியக்கும் விலை, முழு விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 2000-ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சையில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தனது அதிரடியான முடிவுகள் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி உட்பட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடி கொடுத்து வெற்றிப் பாதையில் நடக்க வைத்து இன்றைய தரமான இந்திய அணிக்கு அன்றே விதை போட்டவர். 2008இல் ஓய்வு பெற்ற அவர் அதன்பின் ஐபிஎல் தொடரில் சில காலங்கள் விளையாடி அதிலும் ஓய்வு பெற்று பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

Ganguly 1

- Advertisement -

அந்த நிலைமையில் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டின் தலைவராக போட்டியின்றி அவர் பொறுப்பேற்றபோது அத்தனை இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் களத்தில் இந்திய கிரிக்கெட்டை தனது சிறப்பான முடிவுகளால் வளப்படுத்திய அவர் கிரிக்கெட் வாரியத்தையும் மிகச் சிறப்பாக நிர்வகித்து இந்திய கிரிக்கெட்டுக்கு பல நன்மைகளை செய்வார் என அனைவரும் நம்பினர்.

தலைவர் கங்குலி:
அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக பொறுப்பேற்ற ஒருசில மாதங்களில் அதுவரை விளையாடுவதற்கு தயங்கி வந்த இந்தியாவை முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துடன் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடும் முக்கிய முடிவை கங்குலி எடுத்தார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான ஆணையிலும் கையெழுத்திட்டு அசத்தினார். அதற்கிடையே ஒருசில முறை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அவர் தொடர்ந்து பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Ganguly

இருப்பினும் நீண்ட நாட்களாக கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் அவரின் பெயர் சர்ச்சையாக மாறியது. குறிப்பாக விராட் கோலி – சௌரவ் கங்குலி இடையே ஏற்பட்ட மோதலே ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை பிசிசிஐ அதிரடியாக நீக்குவதற்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் இன்றும் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

- Advertisement -

புதிய வீடு:
ஆனாலும் விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது அவருக்கு நேரில் சென்று கங்குலி வாழ்த்து தெரிவித்தது அவை அனைத்தும் வதந்தி என்று காட்டியது. எது எப்படி இருந்தாலும் தொடர்ச்சியாக பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தற்போது மிகப்பெரிய தொகையில் புதிதாக ஒரு சொகுசு பங்களா போன்ற வீட்டை வாங்கியுள்ளார். பிறந்தது முதல் இதுநாள் வரை பெஹளா பகுதியில் வசித்து வந்த அவர் தற்போது மத்திய கொல்கத்தா பகுதியில் சுமார் 16992 சதுர அடிகள் பரப்பளவிலான மிகப்பெரிய வீட்டை சுமார் 40 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த வீட்டிற்கு அவரின் மனைவி மகள் மற்றும் தாய் ஆகியோரும் துணை உரிமையாளர்களாக பதிவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் கங்குலி போன்ற ஒரு நட்சத்திரம் தங்களது பகுதிக்கு குடியேறுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அதேசமயம் இந்த வீடு தனது உறவினர்களுக்காக அவர் வாங்கியுள்ளதாகவும் தெரிவதால் அங்கு அவர் குடும்பத்தினருடன் குடிப்பெயர்ந்த பின்பு தான் அந்த செய்தி முழுமையாக  உண்மை என நம்பலாம் என்று அறிய முடிகிறது.

கஷ்டமா இருக்கு:.
ஆனாலும் அந்த வீட்டை வாங்கியதை சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த வீடு லோவேர் ராடோன் பகுதியில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் காற்றோட்டத்துடன் நிறைந்த பகுதியில் உள்ளதாக தெரிகிறது. தற்போது புதிய வீடு வாங்கினாலும் கூட பிறந்தது முதல் 48 வருடங்கள் வாழ்ந்த பழைய வீட்டைப் பிரிவது மனதிற்கு கடினமான ஒன்றாக இருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Ganguly-2 இதுபற்றி பிரபல டெலிகிராப் நாளிதழில் அவர் பேசியது பின்வருமாறு. “சொந்தமாக புதிய வீடு வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. அது மிகப்பெரிய ஒன்றாக நினைக்கிறேன். மத்திய பகுதியில் வசிக்கப் போவது சிறப்பான ஒன்றாகும். ஆனாலும் 48 வருடங்கள் வாழ்ந்த ஒரு இடத்தை விட்டு பிரிவது சற்று கடினமான ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement