தோனிக்கு கட்டம் கட்டிய பி.சி.சி.ஐ – தென்னாப்பிரிக்க தொடரிலும் தோனிக்கு கல்தா – காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல முன்னாள் வீரர்களும் டோனியை இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

ஆனால் தோனி தனது எதிர்காலம் குறித்து மௌனமாகவே இருக்கிறார். இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தோனி தெரிவிக்கவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு தோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்தியா வரவிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடம் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த மாதம் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Dhoni

அப்படி அணி அறிவிக்கப்படும் பட்சத்தில் தோனியின் பெயர் அதில் நிச்சயம் இடம் பெறாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது. எனவே அந்த தொடரில் ஆடிய அதே வீரர்களை இந்த தொடரிலும் தொடரவைக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது. அதனால் தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

Advertisement