உறுதியான டேநைட் டெஸ்ட். இன்னும் ஒரு விஷயம் மட்டும்தான் பாக்கியம் – விவரம் இதோ

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் வங்கதேச வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஸ்டிரைக் வாபஸ் பெற்றதால் இந்த கிரிக்கெட் தொடர் தற்போது திட்டமிட்டபடி நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ யின் புதிய தலைவராக பதவியேற்ற கங்குலி இந்த டெஸ்ட் தொடரில் புதிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

அதாவது இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி முடிவு செய்தார். அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியான கொல்கத்தா டெஸ்ட் போட்டி இரவுபகலாக நடக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு போட்டியை நடத்த ஒப்புதல் கடிதம் அனுப்பபட்டுள்ளது.

Ind

வங்கதேச கிரிக்கெட் வாரியம் இதற்கு சம்மதித்தால் நிச்சயம் இந்த போட்டி நடைபெறும் என்றும் இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement