IND vs RSA : இன்றைய கடைசி டி20 போட்டியில் அவங்க 2 பேரும் விளையாட மாட்டாங்க – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Markram
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

INDvsRSA Cup

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் பிரச்சனை இல்லை என்கிற நிலையில் ஆறுதல் வெற்றியை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.

மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாட இருக்கும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இது என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

இந்நிலையில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்றைய மூன்றாவது ஆட்டத்தில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வரும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என தற்போது பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றைய மூன்றாவது போட்டியில் அவர்கள் இருவருக்கும் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : லெஜெண்ட்ஸ் தொடரில் வெடித்த சண்டை : யூசுப் பதானை தள்ளிய ஆஸி வீரர் – ரசிகர்கள் கோபம், வீடியோ உள்ளே

இதில் சபாஷ் அகமது இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பதனால் அவருக்கு இது அறிமுக வாய்ப்பாக கூட அமையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றைய போட்டியின் டாஸிற்கு பிறகு பல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Advertisement