பும்ரா விடயத்தில் பி.சி.சி.ஐ எடுத்த சர்ப்ரைஸ் முடிவு. பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றம் – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த 18 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் புதிய கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

INDvsRSA

- Advertisement -

மேலும் துணை கேப்டனாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில் ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்த விடயம் ஏமாற்றமாகவும் அமைந்து இருக்கிறது.

ஏனெனில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கே.எல் ராகுல் நிச்சயம் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போன்று அவருக்கு அடுத்த இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியின் துணை கேப்டன் வரிசையில் இருந்த வேளையில் பும்ராவிற்கு இந்த பதவியை பி.சி.சி.ஐ வழங்கி உள்ளது.

iyer 1

மேலும் இந்திய அணியில் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதுமே பேட்ஸ்மேன்கள் தான் அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வரும் வேளையில் நீண்ட நாள் கழித்து ஒரு பவுலருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் இருந்து சத்தமில்லாமல் கழட்டி விடப்பட்ட நட்சத்திர வீரர் – இது தெரியுமா?

ஏற்கனவே முன்னாள் வீரர்கள் சிலர் பும்ரா கேப்டன் பொறுப்பிற்கு சரியாக இருப்பார் என்று கூறி வந்த வேளையில் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த டெஸ்ட் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement