ரெய்னா பங்கேற்று விளையாடவுள்ள அணி மற்றும் போட்டிக்கான தேதியை வெளியிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தொடருக்காக சென்னை அணியுடன் பயணித்த ரெய்னா துபாய் சென்ற பின் இடையில் சில பிரச்சினைகள் காரணமாக இந்தியா திரும்பினார். சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகியதற்கு பின்னர் சிஎஸ்கே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கனவே அந்த அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் விலகிய நிலையில் ரெய்னாவும் மனக்கசப்பு காரணமாக இந்தியா திரும்பியதால் சிஎஸ்கே அணிக்கு அது பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது.

Raina

- Advertisement -

மேலும் சில நாட்களிலேயே சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டதால் அவர் இனி சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என்ற கருத்து பொதுவாக உலாவி வந்தது. அதனை தொடர்ந்து ரெய்னா மீண்டும் தான் சிஎஸ்கே அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்தாலும் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைக்கப்படவில்லை இதன் காரணமாக மீண்டும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி வந்தது.

அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க என்ற சந்தேகம் பரவலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவைகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகளில் பங்கேற்பார் என்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வை அறிவித்தார் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாட இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Raina

இதன்படி தற்போது உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணிக்காக 2020 – 21 ஆம் ஆண்டிற்கான சையது முஷ்டாக் அலி தொடர்பாக அவர் விளையாட இருக்கிறேன் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதனால் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ சுரேஷ் ரெய்னா பங்கேற்க இருக்கும் இந்த தொடர் குறித்த முழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2016ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச அணியை தலைமை தாங்கி கோப்பையை பெற்றுக் கொடுத்த ரெய்னா அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இந்த தொடரில் தான் அந்த அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளார்.

Raina

ஜனவரி மாதம் பனிப்பொழிவு மற்றும் குறைவான ஒளி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது அதனால் விரைவில் போட்டிகளை நடத்தி முடிக்க திட்டம் இட்டுள்ளதாகவும் 38 அணிகள் கலந்து கொள்ளும் இந்த மிகப்பெரிய தொடரானது ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உடனே உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைப்பு அளித்து வீரர்களின் விவரம், உடல்நிலை, பெயர் போன்ற முக்கிய தகவல்களை கிரிக்கெட் வாரியத்திடம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜனவரி மாதம் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement