இந்திய அணி வீரர்களின் சம்பளத்தை டபுள் ஆக்கிய பி.சி.சி.ஐ – புதிய சம்பள விவரம் இதோ

IND
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

Ind-1

- Advertisement -

அதன் பின்னர் பயணித்த நியூசிலாந்து மற்றும் கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர்களை அவர்களது நாட்டிலேயே வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் அசைக்க முடியாத அணியாக இந்திய அணி வலம் வருகிறது. எனவே இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிகளை பாராட்ட பி.சி.சி.ஐ ஒரு புதிய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி இனிமேல் வெளிநாடுகளில் நடக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய வீரர்களுக்கான சம்பளம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை வெளிநாடு தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு தினப்படியாக 8899 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இனிமேல் அடுத்து வரும் தொடர்களில் அதனை 17 ஆயிரத்து 799 ரூபாயாக உயர்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சம்பள உயர்வு அடுத்து வரும் வெளிநாட்டு தொடர்களில் இருந்து இந்திய அணிக்கு கிடைக்கும் என்றும் நம்பத்தக்க வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement