ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு என தனியாக கிரிக்கெட் நலவாரிய சங்கம் இருக்கிறது. இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இணைந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்.
ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியம் இதுநாள்வரை அங்கீகரிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தினை அதிகாரபூர்வமாக அமைத்துள்ளது. இது நேரடியாக பிசிசிஐ கண்காணிப்பில் இருக்கும்.
மேலும் சூதாட்ட பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை இந்த சங்கத்திற்காக அமல்படுத்த கோரியது அதன் அடிப்படையில் இந்த சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சங்கம் இன்னும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை. புதிதாக தேர்தல் நடத்தும் வரை இச்சங்கத்திற்கு இயக்குனர்களாக கபில்தேவ், அகர்கர் மற்றும் சாந்தா ரங்கசாமி அவர்கள் இருப்பார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.