தோனி குறித்து நீங்களே எதுவும் பேசாதீங்க அவருக்கு தெரியும் – பத்ரிநாத் பேட்டி

Badrinath
- Advertisement -

தமிழகத்தில் தற்போது டிஎன்பிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. அதன் வேலையாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கோவை சென்றார். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

Dhoni 1

- Advertisement -

அந்த சந்திப்பில் பத்ரிநாத் பேசியதாவது : இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மேலும் இந்த தோல்விக்கு காரணம் மிடில் ஆர்டர் வரிசையில் சரியான தேர்வு இல்லாதது தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

மேலும் உலக கோப்பை தொடர் முடிந்து தோனியின் ஓய்வு குறித்து அதிகம் பேசி வருகிறார்கள். தோனி ஓய்வு குறித்து தலைமையும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை அப்படி இருக்கையில் தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது. ஓய்வு முடிவை பற்றி எடுக்கும் உரிமை தோனிக்கு மட்டுமே உள்ளது.

dhoni 2

இந்திய அணிக்காக பல போட்டிகளில் அவர் வென்று கொடுத்துள்ளார் அதனால் அவரின் ஓய்வு முடிவை அவரே எடுக்கட்டும். அதேசமயம் விக்கெட் கீப்பராக பண்ட்டை தேர்வுசெய்தது வரவேற்கும் விதமாக உள்ளது. மேலும் இப்போது கேப்டன் மாற்றம் இந்திய அணிக்கு தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்று பத்ரிநாத் பேசினார்.

Advertisement