Worldcup : தினேஷ் கார்த்திக்கு பதிலா இவரையே சேர்த்து இருக்கலாம் – அசாருதீன் பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Azhar
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Rishabh pant

இந்த உலகக்கோப்பை தொடரின் இந்திய அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான அசாருதீன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலகக்கோப்பை அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வானது சரிதான். ஆனால், பண்ட் தேர்வாகாதது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் இந்திய அணியின் தோனிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர டெஸ்ட் விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்த நிலையில் இந்திய அணிக்கு தேர்வாகி தற்போதுவரை டெஸ்ட் போட்டிகளில் பண்ட் சிறப்பாக ஆடிவருகினார்.

தினேஷ் கார்த்திக் அனுபவ வீரர் தான். ஆனால், பண்ட் இளம் வீரர் அவருக்கு ஒருநாள் அணியில் இன்னும் நிறைய வாய்ப்புகளை வழங்கி இருந்தால் அவர் தனது திறமையை நிச்சயம் வெளிப்படுத்தி இருப்பார். மேலும், உலகக்கோப்பை இந்திய அணியிலும் முக்கிய பங்காற்றி இருப்பார். அவர் இந்திய அணிக்கு தேர்வாகாதது என்னை வியக்க வைக்கிறது, இருப்பினும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் என்று கூறினார்.

Advertisement