இவங்க மனசு வச்சா மட்டும் தான் இனிமேல் தோனி இந்திய அணியில் விளையாட முடியும் – வெளிப்படையாக பேசிய அசாருதீன்

azharuddin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாததால் அவரது பெயர் இந்திய அணியின் ஊதிய ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இதனால் அவர் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவது கடினம் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை தோனி ஓய்வு குறித்து எந்த ஒரு அறிக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க தோனி நினைத்தார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்கு நுழையலாம் என்று நினைத்திருந்தார். மேலும் ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்த்த பின்னரே அவர் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது என்று அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதன்காரணமாக அவரது இடம் இந்திய அணியில் இறுதிகட்டத்தில் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து டோனி எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தோனி குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறுகையில் : தோனிக்கு என்ன தேவை என்பதை அவர் தான் கூற முடியும். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். இப்போது நாட்டின் சூழ்நிலை சரியில்லை ஐபிஎல் போட்டிகளும் நடைபெற போவதில்லை. இதனால் தோனி குறித்த பிரச்சினையை இப்போதே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் இதுவும் அவருடைய தனிப்பட்ட விருப்பம் தான்.

azharuddin

மேலும் தொடர்ந்து பேசிய அசாருதீன் : தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் தான் அப்படியே திரும்புவதாக இருந்தாலும் தேர்வாளர்கள் அவருடைய திறனை பரிசோதித்து அவர்கள் மனது வைத்தால் மட்டுமே தோனி கிரிக்கெட் விளையாட முடியும். அவர் கிரிக்கெட் விளையாடி பல மாதங்கள் ஆகிறது. நீங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற புரிதலை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு வேறு வழி கிடையாது என்று அசாருதீன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement