கங்குலியின் சிந்தனை வேறலெவல். அவர் திட்டம் நிச்சயம் நடக்கும். கங்குலியை புகழ்ந்த – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பதவி ஏற்ற பின் பல அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி வருகிறார். அதன் முதல் படியாக இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தி அனைவரையும் அசர வைத்தார் கங்குலி அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் குறித்த பல்வேறு ஆக்கபூர்வ அம்சங்களை செய்லபடுத்த ஆலோசனையும் செய்து வருகிறார்.

Ganguly

இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலும் அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளார் கங்குலி. அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் அணிகளாக இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னொரு அணியும் சேர்த்து நான்கு நாடுகள் கொண்ட சூப்பர் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இடம் கங்குலி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்படி இந்த பேச்சுவார்த்தை சரியாக அமையும் பட்சத்திலும், ஐ.சி.சி இதற்கு அனுமதிக்கும் பட்சத்திலும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சூப்பர் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் தொடர் நடைபெறும் என்றும் இந்த திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை கங்குலி தெரிவித்துள்ளார்.

Ganguly

இந்நிலையில் இது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஐசிசி அதிகபட்சமாக மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு போட்டியில் மட்டுமே அனுமதி இதுவரை வழங்கியுள்ளது. இந்நிலையில் கங்குலியின் இந்த புதிய யோசனை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாகியான கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் : பிசிசிஐயின் தலைவராக பதவியேற்ற குறுகிய காலத்தில் கங்குலி பல மாற்றங்களை இந்திய அணியில் கொண்டு வந்துள்ளார்.

Ganguly

மேலும் தற்போது நான்கு நாடுகளுக்கு இடையேயான சூப்பர் சீரிஸ் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளார். அவரது இந்த புதிய சிந்தனை சிறப்பாக உள்ளது. மேலும் அவரின் மேல்நோக்கு சிந்தனைக்கு இது சிறந்த உதாரணம் அவர் மாறுபட்ட சிந்தனை கொண்டவர் என்று கங்குலியை புகழ்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமிடமும் கங்குலி பேசி வருவதால் 2020 ஆம் ஆண்டிற்குள் சூப்பர் சீரிஸ் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெற்றால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement