இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பல அணிகளில் பல வீரர்கள் கோடி கணக்கில் ஏலமெடுக்கப்பட்டனர். அதில் சில வீரர்கள் தாங்கள் வாங்கிய தொகைக்கு சிறப்பாக விளையாடினாலும் ஒரு சில வீரர்களின் ஆட்டம் அந்த அணிக்கு ஏமாற்றத்தை தான் அளித்தது. அந்த வகையில் ராஜாஸ்ரன் அணி ஜெய்தேவ் உனத்கட்தை ஏலம் எடுத்து தன் தலையில் தானே மண்ணை வாரிக்கொண்டு போட்ட கதையாக இருந்தது.
2016 -2017 ஆம் நடந்த ராஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடி 40 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தினார். கடந்த ஆண்டு நடைபெற ஐபிஎல் போட்டியில் புனே அணிக்காக விளைய்டியா இவர் 12 போட்டிகளில் 24ரன்களை எடுத்து அசத்தினார். அதனை நம்பி இவரை இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி இவரை 11.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து.
அனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் 15 போட்டிகளில் விளையாடிய உனத்கட் 11 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார். மேலும் இவரது பந்து வீச்சின் சராசரியை எடுத்துக் கொண்டால் ,ஒவருக்கு 16.50 ரன்கள் வாரிவழங்கியுள்ளார். எனவே இவர் ஏலமெடுக்க பட்டதோ 11.5 கோடிக்கு ஆகா ராஜஸ்தான் அணி இவர் எடுத்துள்ள 1 விக்கெட்டுக்கு 1 கோடி ரூபாயை கொடுத்த கதையாக மாறிவிட்டது.
அதே போல நேற்று ராஜஸ்தான் அணி விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற்றிருந்தால் அந்த அணிக்கு இறுதி சுற்றிற்கு நிலைய இரண்டாவது வைபவது கிடைத்திருக்கும். . ஆனால் நேற்று நடந்த இந்த முக்கியமான போட்டியிலும் உனத்கட் 2 ஓவர்களை வீசி 33 ரன்களை வாரி வழங்கினார். இதனால் இவருக்கு மீதமுள்ள 2 ஓவர்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.