மிகவும் மோசமான காலை. இனிமேல் இப்படி நடக்கக்கூடாது – அஷ்வின் ஆதங்கம்

Ashwin
- Advertisement -

கடந்த 25ஆம் தேதி மாலை சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிகழ்வுதான் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பலரை துக்கத்தில் ஆழ்த்தியது. அவன் மீண்டு வருவான் என்று பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் மூன்று நாட்கள் கழித்து அவர் சடலமாக மீட்கப்பட்டான்.

- Advertisement -

இந்நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டு அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் மோசமான கலை இனி இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த செய்தி குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆகிய ஆகியோர் அந்த சிறுவன் குறித்த பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement