நான் தான் நீ சொன்ன எஸ்.கே அஷ்வினுக்கு ஷாக் கொடுத்த நபர் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்திய அணிக்காக பத்து ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கழற்றிவிடப்பட்ட போதும் டெஸ்ட் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை இன்றுவரை வெளிப்படுத்தி வருகிறார்.

Ashwin 1

- Advertisement -

மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் பங்கேற்கும் முன் கிரிக்பஸ் இணையதளத்திற்கு அஸ்வின் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : முதன்முறையாக நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் சந்தித்த விஷயம் அது. வழக்கமாக நான் விளையாட சென்ற மைதானத்தில் அங்கே ஒருவரது பவுலிங் ஸ்டைல் ஆக்சன் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அவர் தொடர்ந்து சிறப்பான பந்துகளை பேட்ஸ்மேன்கள் சிரமப்படும் விதத்தில் தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார்.

அவரது பந்து அவ்வளவு சிறப்பாக ஸ்பின் ஆனது. அப்பொழுது நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்ஸ்மேன் ஆனால் என்னாலும் அந்த பந்தை சரியாக கணித்து அடிக்க முடியவில்லை அதன்பின்பு நான் அவரிடம் இருந்து அந்த பந்துவீச்சு முறையை கற்றுக் கொள்ள ஆவலாக கேட்டுக்கொண்டேன். அவரின் பெயர் எஸ்கே அதுமட்டும் தான் எனக்கு இன்றுவரை தெரியும். அதன்பின்னர் 15 நாட்கள் தொடர்ந்து அவரிடம் காலையில் பயிற்சிக்கு சென்று அந்த கேரம் பால் முறையை கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

Ashwin

இதுகுறித்து அஸ்வின் குறிப்பிட்ட எஸ்.கே கூறுகையில் : அஸ்வின் செம சர்ப்ரைஸ் இருக்கு. நான் தான் நீ சொன்ன எஸ்கே என்னை நீ புகழ்ந்து பேசியது ரொம்ப பெரிய விஷயம். நீ என்னை பற்றி பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னை நினைத்தால் நான் ரொம்ப பெருமை படுகிறேன் டென்னிஸ் பந்து ஆடத் தொடங்கி இன்று இந்திய அணிக்காக நீ விளையாடுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

Ashwin

இந்திய அணியில் நீண்ட தூரம் பயணித்து நிறைய சாதனைகள் தொடுவது எல்லாம் என்னுடைய கேரம் பந்து என்று நீ சொல்வதை கண்டு நான் வியப்படைகிறேன். இதனால் நீ தொடர்ந்து சாதிக்கவேண்டும் என்று எஸ்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement