99 ரன்களில் இருக்கும்போதும் நான் இறங்கி வந்து அடிக்க இதுவே காரணம் – அஷ்வின் ஓபன்டாக்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்த ஒரு போட்டி என்றே கூறலாம். ஏனெனில் முதல் இன்னிங்சின் போது இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் அடித்ததும், அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து அளித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் சென்னை மண்ணின் மைந்தனான அஸ்வின் பேட்டிங்கில் சதமடித்து அசத்த அவர்களது குடும்பம் பெவிலியனிலிருந்து அதை ரசித்தனர்.

Ashwin

- Advertisement -

அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இந்த போட்டியில் சதமடித்து அதுமட்டுமின்றி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி குறித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அஷ்வின் தான் சதம் அடித்த போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

சென்னை போட்டியில் நான் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோ போல உணர வைத்தார்கள். மேலும் நான் என் குழந்தைகளுக்கு முன்னிலையில் மூன்றாவது நாளில் இந்த சதத்தை அடித்தது மகிழ்ச்சி அளித்தது. இரண்டாவது நாளில் 5 விக்கெட் எடுக்கும் பொழுது என் குடும்பத்தார் எனது ஆட்டத்தைப் பார்த்து கொண்டிருந்தார்கள். இனிமேல் நான் சென்னையில் இதுபோன்று ஒரு போட்டியில் விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இன்றைய போட்டி எனக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது என்று அஷ்வின் கூறினார்.

ashwin 1

மேலும் தான் சதம் அடித்தது குறித்து குறிப்பிடுகையில் : நான் என்பது ரன்களை கடந்து உடனே சதம் அடிப்பேன் என்று உறுதியாக நம்பினேன். மேலும் நான் அடிக்கும் பந்துகள் எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி 99 ரன்களை கடந்தபோது நான் சிங்கிள் எடுத்து சதத்தை கடக்காமல் தூக்கி அடிக்க என்ன காரணம் எனில் ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான். அதுவே என்னை பலப்படுத்தியது.

ashwin 2

ஒவ்வொரு ரசிகரும் அஷ்வின் அஷ்வின் என்று கூச்சலிட எனக்குள் இருந்த நம்பிக்கை அதிகரித்தது. அதனால்தான் 99 ரன்களில் இருந்த போதும் கூட நான் பந்தை இறங்கி அடித்தால் அது செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக செல்லும் என்று நினைத்தேன். அதன் காரணமாகவே ஒரு ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்யாமல் இறங்கிவந்து அடித்தேன். பந்தும் நான் நினைத்தது போன்றே அதிர்ஷ்டவசமாக பவுண்டரி சென்றது என்று சதமடித்த நினைவை அஸ்வின் நினைவுக்கு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement