ஏதோ 3 ஆவது மனுஷன் போல தனியாக அமர்ந்து போட்டியை பார்த்த அஷ்வின் – வைரலாகும் புகைப்படம்

ashwin-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்த போட்டியில் இந்திய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மட்டுமின்றி இந்த தொடரிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் தமிழக வீரர் அஷ்வினுக்கு இதுவரை பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் இடம் கிடைக்காத அஷ்வினுக்கு நிச்சயம் 4வது டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4-வது போட்டியிலும் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக கோலிக்கும், அஷ்வினுக்கும் இடையே எதாவது மோதல் உள்ளதா ? என்பது போன்று கூட சில கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை தனியாக ரசிகர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து அஷ்வின் பார்த்துள்ளதால் மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் அஷ்வினுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

ashwin

அதேவேளையில் வீரர்களின் ஓய்வு அறையில் கூட அமராமல் அஷ்வின் ஏன் தனியாக சென்று போட்டியை ரசித்தார் ? என்பதன் விளக்கம் தெரியவில்லை. இருப்பினும் சற்று சோகத்துடன் காணப்படும் அஷ்வின் தனியாக கடைசி நாள் போட்டியை கண்டு ரசித்துள்ளார். இது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பிலும் ஒளிபரப்பாகியது.

ashwin 3

அதுமட்டுமின்றி அஷ்வின் தனியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களின் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா ? என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அணியின் 12 ஆவது வீரராக அஷ்வின் எப்போதும் தொடர்வார் என கோலி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement