வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளிலேயே ஆட்டம் முடிந்து விட்டதால் ஒரு நாள் இந்திய அணிக்கு விடுமுறை கிடைத்துள்ளது. அந்த விடுமுறை நாளை இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஆண்டிகுவா நகரில் உள்ள கடற்கரையில் கழித்தனர்.
இந்நிலையில் முதல் போட்டியில் வாய்ப்பளிக்கப்படாத ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து உள்ளார். இதற்கு முன்னதாக கோலி மற்றும் அஸ்வின் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை கோலிதேர்வு செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
அவர்களுக்குள் எந்த ஒரு விரிசலும் இல்லை. அவர்கள் நல்ல நட்பு நட்புடன் இருக்கிறார்கள் என்பதனை தற்போது அஷ்வின் ஒரு புகைப்படத்தின் மூலம் நிரூபனம் செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம் :
Seaside plus sunset is a deadly combination???? pic.twitter.com/u7YpSQR9db
— Ashwin Ravichandran (@ashwinravi99) August 27, 2019
தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா, ராகுல் ஆகியோருடன் நடுக்கடலில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கோலிக்கும், இவருக்கும் இடையே உள்ள விரிசல் குறித்து கருத்துக்களை சொன்னவர்களுக்கு தனது புகைப்பட பதிவின் மூலம் அஸ்வின் பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.